டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டையம்பாளையம் ஆரம்ப பள்ளி அருகே மின் கம்பி செல்கிறது. இந்த மின் கம்பியை அந்த பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் தொட்டபடி இருந்தன. இதனால் மின் விபத்து நிகழும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின் கம்பியை தொட்டபடி இருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதுபற்றி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றிைய தொிவித்து கொள்கிறோம்.