சாய்ந்த மின்கம்பம்

Update: 2022-11-02 11:49 GMT

வேலூர் கஸ்பா மெயின் சாலை ஓரம் மின் கம்பங்கள் உள்ளன. அவற்றில் ஒரு மின்கம்பம் சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் நிற்கிறது. அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தானம், வேலூர்.

மேலும் செய்திகள்