மின்ஒயர்களில் படர்ந்த கொடிகள்

Update: 2023-09-13 17:44 GMT

அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே என்ஜினீயரிங் ஒர்க் ஷாப் அருகில் உள்ள ஒயரில் செடி கொடிகள் வளர்ந்து தோரணம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சோளிங்கர் ரோடு ரவுண்டானா சிக்னல் வரையிலும் ஒவ்வொரு மின் கம்பங்களின் பகுதியிலும் ஒயர்கள் அறுந்து தொங்கிய படி உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

-கவுரிசங்கர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்