மின் விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2023-01-22 13:47 GMT

கலவை அருகே வேலூர் மாவட்டத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தையும் பிரிக்கும் எல்லையாக கமலநதி உள்ளது. அந்த நதியின் குறுக்ேக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலம் வாழைப்பந்தல் முணுக்கப்பட்டு கிராமங்களை இணைக்கும் மேம்பாலமாக உள்ளது. அந்தப் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் ெசல்வோர் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கமலநதியின் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எல்.ஆர்.ராஜேந்திரன், கலவை.

மேலும் செய்திகள்