கைக்கு எட்டும் உயரத்தில் செல்லும் மின் வயர்

Update: 2022-08-16 13:01 GMT


அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாற்று பாலத்தில் மின்விளக்குகளுக்கான வயர் கைக்கு எட்டும் உயரத்தில் செல்கிறது. அதிகாலை நேரத்தில் பெரும்பாலானவர்கள் இங்கு நடை பயிற்சிக்கு செல்கிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனை தவிர்க்க உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கைக்கு எட்டும் உயரத்தில் செல்லும் வயரை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்