அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்காலி கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெரு நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றக் கோரி ஒரு வருடமாக மின்வாரியத் துறைக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-வேல்முருகன், கருங்காலி.