சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2023-11-05 17:34 GMT

வாலாஜா-அணைக்கட்டு ரோட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் போகும் தார் சாலையில் மின்சார கம்பம் ஒன்று 15 ஆண்டுகளாக நடுரோட்டிலேயே உள்ளது. அந்த வழியாகத்தான் அம்மணந்தாங்கல், அமராவதி, குடிமல்லூர் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்த மின் கம்பத்தால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே மின் கம்பத்தை அங்கிருந்து அகற்றி சாலையோரம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏழுமலை, வாலாஜா.

மேலும் செய்திகள்