மின்கம்பத்தால் இடையூறு

Update: 2023-09-06 17:06 GMT

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் தெருவின் நடுவே மின் கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது, சம்பந்தமாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும்.

-ந.உதயகுமார், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்