பகலில் எரியும் மின் விளக்குகள்

Update: 2023-08-30 17:16 GMT

நாட்டறம்பள்ளி அருகே பூசாரியூர் பகுதியில் ஜோலார்பேட்டை- நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் சாலையில் பகல் முழுவதும் தெரு மின் விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரவில் மட்டும் சாலையோரம் உள்ள மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பகலில் மின் விளக்குகளை அணைத்துவிட வேண்டும்.

-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்