ஆபத்தான மின் கம்பம்

Update: 2024-01-21 17:28 GMT

அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் நாகாலம்மன் நகர் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம், வணிக வளாகங்கள் உள்ளது. இங்குள்ள பாலாஜி நகர் பகுதி அருகில் ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. அதன் சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன்பாபு, அரக்கோணம்.

மேலும் செய்திகள்