திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா அம்மணாங்கோவில் ஊராட்சி காட்டூர் கிராமத்தில் கலக்காயன் வட்டத்தில் ஒருவரின் நிலத்தில் மிக ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக உள்ளன. மின் கம்பிகளால் எந்தநேரமும் ஆபத்து நடக்கலாம். மின் கம்பிகளை உயர்த்தி மேலே கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சக்தி, அம்மணாங்கோவில்.