மின்கம்பங்கள் சேதம்

Update: 2022-10-05 11:58 GMT

அணைக்கட்டு ஒன்றியம் கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இருந்து சுமார் 700 மீட்டர் தூரத்தில் மேல் கிருஷ்ணாபுரம் காலனி உள்ளது. இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் சென்றுவர ஏரிக்கரையில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை அமைத்து மின்விளக்குகளை ெபாருத்தி எரிய விட்டுள்ளனர். 10 கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வெறும் கம்பிகள் மட்டுமே உள்ளன. பலவீனமாக காணப்படும் மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். ஆபத்து நடக்கும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த 10 மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை நட வேண்டும்.

-வினோத், மேல்கிருஷ்ணாபுரம் காலனி. 

மேலும் செய்திகள்