அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-10-01 17:34 GMT

சோளிங்கரை அடுத்த தாளிக்கால் கிராமத்தில் கனக துர்க்கையம்மன் கோவில் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டன. ஆனால் மின்கம்பங்களில் உயரழுத்த மின் கம்பிகள் பொருத்தப்படவில்லை. அவர்களின் வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர அவர்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்