நடுரோட்டில் இருக்கும் மின்கம்பம்

Update: 2022-08-12 10:22 GMT

ஆரணி நகராட்சி 4-வது வார்டு புதுகாமூர் பகுதியில் நடு ரோட்டிலேயே மின் கம்பம் உள்ளதால், அந்த வழியாகக் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பயனாளிகள், பொதுமக்கள் பணம் செலுத்தினால் மட்டுமே மின்கம்பத்தை மாற்ற முடியும் எனக் கூறி வருகிறார்கள். இதனால், மின்கம்பத்தை மாற்றாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை சாலையோரம் அமைக்க வேண்டும்.

விஜயன், ஆரணி

மேலும் செய்திகள்