கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2023-09-20 17:55 GMT

வந்தவாசி புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மின்கசிவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவார்களா?

-சரஸ்வதி. வந்தவாசி.

மேலும் செய்திகள்