சாய்ந்த மின் கம்பம்

Update: 2022-08-20 11:48 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி புதுமனை தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பம் ஒன்று சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,திருமருகல் 

மேலும் செய்திகள்