போக்குவரத்திற்கு இடையூறான மின் கம்பங்கள்

Update: 2023-03-26 11:58 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது புத்தனாம்பட்டி. இங்கு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, கலை அறிவியல் கல்லூரி, மின்சார வாரிய அலுவலகம், துணை மின் நிலையம், திருமண மண்டபங்கள் போன்றவை இருக்கிறது. மேலும் முசிறி, துறையூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருப்பட்டூர் பிரம்மா கோவில் செல்வதற்கு புத்தனாம்பட்டி வழியாகத்தான் சென்று வருகிறார்கள். வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்காக தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புத்தனாம்பட்டியில் இருக்கும் மாவட்ட இதர சாலையானது விரிவாக்கம் செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலையை ஒட்டியும் விரிவாக்கம் செய்யப்படும் சாலையின் நடுவிலும் மின் கம்பிகளை சுமந்து செல்லும் மின்சார கம்பங்கள் உள்ளன. புதிதாக விரிவாக்கம் செய்யும் சாலைக்கு வெளியே இந்த கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாததால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் செய்யும் பணியானது தாமதமாகி வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி புத்தனாம்பட்டி கிராமத்தில் விரிவாக்கம் செய்யும் சாலையில் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை அகற்றி மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்