பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் பகுதியில் ஓர் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட மழலை குழந்தைகள் பயில்கின்றனர். இம்மையத்தின் மின் மீட்டர் பெட்டியில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் வசதிகள் இன்றி இம்மையம் செயல்பட்டு வருகிறது. கம்பத்தின் வயர்களும், மின் மீட்டர் பெட்டியும் அந்தரத்தில் தொங்கி காட்சி அளிக்கிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குழந்தைகள் மின்வசதி இன்றி பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மின் மீட்டர் பெட்டியில் பழுதுகளை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.