சிதம்பரம் அருகே கொள்ளிடம்-சீர்காழி சாலையில் தைக்கால், எருக்கூர், அரசூர் போன்ற பகுதிகளில் உள்ள மின்விளக்குகள் பகலிலும் இடைவிடாது எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.