மின்தடையால் பொதுமக்கள் அவதி

Update: 2022-12-11 09:30 GMT

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் தினமும் 50 முறைக்கு மேல் மின்சாரம் தடைபடுகிறது. பின்னர் 2 அல்லது 3 மணி நேரம் கழித்துதான் மின்சாரம் வருகிறது. இந்த மின்தடையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதியுற்று வருகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்