ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-14 14:02 GMT

அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் தவுட்டுப்பாளையத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் தெரியும் அளவுக்கு எலும்புக்கூடாக ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. வேகமாக காற்று வீசினால் இந்த மின் கம்பம் விழுந்துவிடும். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை மாற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்