உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்மாற்றி

Update: 2022-07-10 18:14 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கண்டோன்மெண்ட் வ.உ.சி. சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் இப்பகுதியில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதுடன். கடைகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்