ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-22 11:58 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடத்தை அடுத்த வடரங்கம் சின்னத்தெரு செல்லும் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம். மேலும், மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியை பொதுமக்கள், வாகனஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்