பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே ஆலம்பாடி ரோட்டில் தெரு விளக்குகளில் எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலம்பாடி ரோட்டில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.