நாகை மாவட்டம் திட்டச்சேரியில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது.இதில் இருந்து திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திட்டச்சேரி துணை மின் நிலைய கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் எவ்வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின் றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திட்டச்சேரி பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திட்டச்சேரி