புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-08-18 15:41 GMT

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் 3-வது தெருவில் மின்விளக்குகள் எரியாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தூத்துக்குடியை சேர்ந்த அழகப்பன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து அங்கு தெருவிளக்குகள் சரிசெய்யப்பட்டு, இரவில் அவை ஒளிர்கின்றன. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்