சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-08-18 12:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் சாலையோரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அறுவடை எந்திரங்கள், டிராக்டர்களை வயலுக்குள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்