மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி ரிங்ரோடு தெரு பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.