உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை

Update: 2022-08-17 16:02 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி- பேளூர் பிரிவு ரோட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுர விளக்குகளில் ஒன்று மட்டுமே எரிகிறது. மற்ற விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அனைத்து விளக்குகளும் எரிய செய்ய வேண்டும்.

-வெங்கடேஸ்வரி, வாழப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்