திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் எஸ். எம். ஏ. நகர் உள்ளது. இந்த நகரில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழு்ந்து உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் , புலிவலம்