விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கே.கே.நகர் 21-வது வார்டு பகுதியில் உள்ள சில தெருவிளக்குகள் சில நாட்களாக எரிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் புதிய மின்விளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.