கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் (அப்பாவு சந்து) உள்ள தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். ஆகவே எல்.இ.டி. விளக்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.