சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

Update: 2022-08-15 16:27 GMT

பனவடலிசத்திரம் அருகே சாயமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆராய்ச்சிபட்டி கிராமத்திற்கு, அச்சம்பட்டி பஞ்சாயத்து மடத்துப்பட்டி ஊரில் இருந்து மின்சார வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மின்சார வழித்தடத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அதனால் மின்சாரக் கம்பி அறுந்து தரையில் கிடக்கிறது. ஆனால் இதுவரை சரிசெய்யப்படாததால், அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்