தெரிசனங்கோப்பில் இருந்து தெள்ளாந்தி செல்லும் சாலையில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திவ்யா, ெதள்ளாந்தி