தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா தெக்கலூர் கிராமம் காமநாய்க்கன்பாளையம் கிழக்கு பகுதியில் தெரு விளக்கு இல்லை. இதன் காரணமாக இருள் சூழ்ந்து காணப்படுவதால் அசம்பாவித செயல்கள நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை தெரு விளக்கு போட வில்லை எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீரன், திருப்பூர் 86107 73128