கரூர் மாவட்டம், பேச்சிப்பாறை சுடுகாடு அருகே மின்கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தில் உள்ள மின் கம்பியில் இருந்து 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக அதன் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் இதுவரை சிதிலமடைந்த மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகளை புதிய மின் கம்பத்திற்கு மாற்றாமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் மின் கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.