மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகள் அகற்றம்

Update: 2022-08-13 11:07 GMT

மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகள் அகற்றம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அலங்கியம் பஸ் நிறுத்தத்தில் மின்சார கம்பிகள் மீது ஆபத்தான வகையில் மரங்கள் உரசிக்கொண்டு இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கும், புகார் பெட்டியில் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஜபருல்லாஹ்,அலங்கியம்.

6381921342

மேலும் செய்திகள்