பயன் இல்லாத மின்கம்பம்

Update: 2022-08-12 15:40 GMT

கரூர் மாவட்டம், பரமத்தி வேலூர்- கொடுமுடி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்துறை அருகே கூலக்கவுண்டனூர் மெயின் ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தில் இருந்து அருகாமையில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக அருகாமையில் புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. புதிய மின்கம்பம் நடப்பட்டு சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் பழைய மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகளை புதிய மின்கம்பத்தில் இணைக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்