பாதுகாப்பற்ற மின்சாதன பெட்டி

Update: 2022-08-12 15:16 GMT
கரூர் மாவட்டம், பாலத்துறையை அடுத்த கூலக்கவுண்டனூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி அருகே மின்கம்பம் நடப்பட்டு அந்த மின் கம்பத்திலிருந்து மின்மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அங்குள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து அருகாமையில் உள்ள குடிநீர் தொட்டிக்கு குடிநீர் செல்கிறது. இந்நிலையில் மின் மோட்டாருக்கு மின்வினியோகம் செல்வதற்காக பொருத்தப்பட்டுள்ள மின்சாதன பெட்டி பாதுகாப்பு அற்ற நிலையில் திறந்தே இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்