காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருங்குன்றம் பகுதியில் உள்ள வயல்வெளியில் செல்லும் மின்சார கேபிள் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டு இருக்கிறது. இந்த வயல் வெளியில் காலை மற்றும் மாலை வேலையில் கால்நடைகள் நடமாடுவதால் அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் வயலில் இறங்கி வேலை செய்பவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்குமா?