எரியாத தெருவிளக்கு

Update: 2022-08-10 14:18 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை பட்டி ரோடு அய்யப்பன் நகர் 2-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள ஒரு தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இந்த பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் நடந்து செல்வதற்கு குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்