மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோட்டில் கோச்சடை பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் தெருவில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் வாரச்சந்தை செயல்படுவதால் அங்கு பொதுமக்கள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய மின்விளக்குகள் பொருத்திட வேண்டும்.