தெரு விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-08-10 12:34 GMT

திருச்செந்தூர் சண்முகபுரத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ராணிமகாராஜபுரம், கோவில்விளை, நத்தகுளம் ஆகிய ஊர்களில் இருந்து அந்த வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவார்கள். 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் டியூசன் படித்துவிட்டு இரவு 7.30 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். ஆனால், அந்த சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்