நாகை புதிய கடற்கரை சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபடவும் வழிவகை செய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா.