நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே மேலவாஞ்சூர் ரவுண்டானா -பனங்குடி இடையே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன்காரணமாக மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?