கடையம் மெயின் ரோட்டில் உள்ள சுமார் 20 தெருவிளக்குகளில் இரண்டு மின்விளக்குகள் மட்டுமே எரிகிறது. மீதமுள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்கள் குறிப்பாக வயதான முதியவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, தெருவிளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.