ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பஸ் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கூடுதல் மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.