மதுரை மாவட்டம் குருதியேட்டர் சிக்னல் சந்திப்பில் இருந்து வைகை காமராஜர் பாலம், பாத்திமா கல்லூரி ரவுண்டானா வரை உள்ள தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. போக்குவரத்து பிரதான மிக்க இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்த பாதையை பயன்படுத்துவதை பயணிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.