அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி நடுதெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடுத்தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரியாமல் உள்ளது. இதனால் தெருமுழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால் தெருவில் நடந்து செல்லும் போது விஷஜந்துக்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.