ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுக பகுதியில் மின்விளக்குகள் இல்லை. இருள் சூழ்ந்து காணப்படுவதால் கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்கள் அவதியடைகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.